ஷார்ஜா: துபாயின் ஷார்ஜா பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ் வாலிபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவின் அல்புத்தைனா பகுதியில் குடும்பத்தாருடன் வசிக்கும் 19 வயது வாலிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடனும், உடலின் சில பகுதிகளில் எலும்பு முறிவுடனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர், அபாயகட்டத்தை கடந்து உடல்நிலை தேறி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த வாலிபர் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.NEWS24X7