கோலிவுட் செய்திகள்

பாங்காக்கிலிருந்து வந்த நயனதாராவிடம் சென்னை சுங்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை பாங்காக் போய் விட்டு வந்த நடிகை நயனதாராவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நிறுத்தி வைத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நயனதாரா இடையில் ஏற்பட்ட 2 காதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ள அவர் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அவரும் அவரது மேனேஜர் ராஜேஷ் மற்றும் மேக்கப் மேனுடன் பாங்காக் போயிருந்தார்.அங்கு போன வேலையை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நயனதாராவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் ராஜேஷை தனியாக கூட்டிச் சென்று இன்னொரு அறையில் வைத்து விசாரித்தனர். அவர்களின் சூட்கேஸ்களையும் முழுவதுமாக சோதனையிட்டனர். முக்கால் மணி நேரம் நயனதாராவிடம் விசாரணை நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முக்கால் மணி நேர விசாரணைக்குப் பின்னர் வியர்க்க விறுவிறுக்க நயனதாரா வெளியே வந்தார். அவரது மேனேஜரையும் அதிகாரிகள் விடுவித்து விட்டனர். நயனதாராவின் பாங்காக் பயணம் குறித்துத்தான் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. அவர் குறித்து யாரேனும் சுங்கத்துறையினருக்கு வேண்டும் என்றே தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவாவை காதலித்த காலத்தில் தனது கையில் பிரபுதேவா என்று பச்சை குத்தி வைத்திருந்தார் நயனதாரா. தற்போது அதை அழிக்க முடியாமல் கடுமையாக சிரமப்படுகிறார். இதற்காகவே அவர் பாங்காக் போயிருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. மொத்தத்தில் நயனதாராவுக்கு இந்த நாள் நிச்சயம் நல்ல நாளாக அமையாமல் கசப்பான நாளாக மாறி விட்டது உண்மை. ---------------------------------------------------------------------------------------------- » தமிழ் » சினிமா » ஹீரோயின் 'சிம்புவுடன் நடிக்க நான் ரெடி... ஆனா மூணு கண்டிஷன்'- நயன்தாரா
என் படங்களில் நயன்தாரா நடிக்கிறார்னு நியூஸ் போடாதீங்க என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிம்பு. ஆனால் இன்னொரு பக்கம், தன் அடுத்த பட நாயகியாக நடிக்க விருப்பமா என நயனுக்கு தூது விட்டு வருகிறாராம். இதனை நயன்தாராவே இப்போது அம்பலமாக்கிவிட்டார். இப்போது சிம்பு நடிக்கும் வாலு படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பது உண்மைதானாம். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிக்க தனக்கு சம்மதம் என்று கூறியுள்ள நயன்தாரா, அதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளாராம். தனக்கு சம்பளமாக தென் இந்தியாவில் எந்த கதாநாயகியும் வாங்காத அளவுக்கு ரூ.3 கோடி சம்பளம் தர வேண்டும். நடிப்பு தொடர்பான விஷயம் தவிர தனிப்பட்ட முறையில் என்னுடன் சிம்பு நெருங்கி பழகவோ பேசவோ முயற்சிக்கக் கூடாது. முக்கியமாக எனது கேரவன் பக்கமே சிம்பு வரக்கூடாது போன்றவைதான் நயன்தாரா விதித்துள்ள நிபந்தனைகள் என்கிறார்கள் (கவனிக்க- நெருக்கமான காதல் காட்சிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை!). இதுக்கு பேசாம நடிக்கமாட்டேன்னே சொல்லிடலாமே, என்று கமெண்ட் அடித்தாராம் பணத்தைக் கொட்டவிருக்கும் தயாரிப்பாளர்! ----------------------------------------------------------------------------------------------< kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்தவர், உதயதாரா. இவருக்கும், சார்ஜாவில் வசிக்கும் பைலட் ஜூபின் ஜோசப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் மார்ச் 7ம் தேதி கோட்டயத்தில் நடைபெறுகிறது. 16-ம் தேதி கோட்டயம் அருகிலுள்ள கடுத்துருத்தி என்ற இடத்தில் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்று உதயதாராவிடம் கேட்டபோது, "இனி நான் நடிக்க மாட்டேன். திருமணம் முடிந்ததும் கணவருடன் சார்ஜாவில் குடியேறுகிறேன். நடித்த படங்களின் ஷூட்டிங்கை முடித்து விட்டேன்" என்றார்.

....................................................................................................................................................................................................................

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரீமா சென்னுக்கு சொகுசு கார் : வருங்கால கணவர் பரிசளித்தார் 
ரீமா சென்னுக்கு அவரது வருங்கால கணவர் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரை பரிசளித்தார். அதில் சென்று நடிகர், நடிகைகளுக்கு கல்யாண பத்திரிகை வைக்கிறார் ரீமா. மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், வல்லவன் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரீமா சென். இவருக்கும் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் சிவ் கரண் சிங்குக்கும் வரும் மார்ச் 11ம் தேதி திருமணம் நடக்கிறது. தன்னுடன் படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு ரீமா சென் தனது திருமண பத்திரிகையை கொடுத்து வருகிறார். திருமண நிகழ்ச்சி மெஹந்தி விழா, சங்கீத் நிகழ்ச்சி, திருமணம் மற்றும் வரவேற்பு என 4 நாள் கொண்டாட்டமாக நடக்கிறது. காதலர் தினத்தன்று ரீமாவை டெல்லிக்கு வரும்படி அழைத்திருந்தார் சிவ் கரண். விமான நிலையத்தில் ரீமா சென்று இறங்கியதும் அவரை வரவேற்க புத்தம் புதிய பி.எம்.டபிள்யூ கார் காத்திருந்தது. பிங்க் நிறத்திலான பலூன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த காரை காதலர் தின பரிசாக ரீமாவுக்கு அளித்தார்
சிவ்



..................................................................................................................................................................

நாடு முழுவதும் சினிமா காட்சிகள்-சூட்டிங் ரத்து: இந்திய திரையுலகம் இன்று ஸ்தம்பிக்கிறது
 1/1 

சென்னை, பிப்.23 -சினிமாத் துறைக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்தியா முழுவதும் இன்று சினிமா சூட்டிங் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. திரையுலகிற்கு மத்திய அரசு 30 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று சினிமா காட்சிகள் மற்றும் சூட்டிங் ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஸ்டூடியோ, தியேட்டர்கள் ஒரு நாள் ஸ்தம்பிக்கிறது. இது பற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே. லப்பா கூறுகையில், 
சினிமாவுக்கு ஏற்கனவே கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு வரி விதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே சேவை வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி இன்று இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகிறது. ஸ்டூடியோக்களும் மூடப்படுவதுடன் அனைத்து சூட்டிங்குகளும் ரத்து செய்யப்படுகிறது. சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இன்று ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது என்றார். 
இது குறித்து ஆலோசனை செய்ய தமிழ்த் திரையுலகினர் பங்கேற்ற கூட்டம் நேற்று பிலிம்சேம்பரில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பெப்சி செயலாளர் சிவா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், இந்திய திரைப்பட சங்க துணை தலைவர் சுரேஷ், இயக்குனர் சங்க செயலாளர் அமீர், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
பின்னர் அவர்கள் கூறுகையில், திரையுலகம் ஏற்கனவே பல்வேறு சுமைகள் காரணமாக நலிந்திருக்கிறது. சேவை வரி விதிப்பால் மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இந்தியா முழுவதும் இன்று நடக்கவுள்ள திரையுலக போராட்டத்தில் தமிழ்த் திரையுலகம் சார்பாக அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும். அதன்படி சினிமா படப்பிடிப்பு, தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும். சேவை வரியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சென்னை பிலிம்சேம்பரில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த கூட்டம் நடக்கும் என்றனர்


.........................................................................................................................................................................................................................


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாலிவுட் பாணியில் கோலிவுட்டிலும் 2-ம் பாகம் மோகம் 
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது.  மிஷன் இம்பாசிபிள், ஹாரி பார்ட்டர், ஜுராசிக் பார்க் என பல்வேறு ஹாலிவுட் படங்கள் முதல்பாகத்தோடு நின்றுவிடாமல் 2, 3 என அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின்றன. அந்த பாணி இப்போது தமிழ் படங்களிலும் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் ‘பில்லா 2’. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து ‘பில்லா 2’ உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’ படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் அடுத்த மாதம் முடிகிறது. அதன்பிறகு ‘சிங்கம்-2’வில் நடிக்கிறார் சூர்யா. அதே போல் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ 2-ம் பாகம் தொடங்க உள்ளது. தற்போது திரு இயக்கத்தில் ‘சமரன்’, சுந்தர்.சி. இயக்கும் புதுபடம் என 2 படங்களில் விஷால் நடிக்கிறார். அப்படங்கள் முடிந்த பிறகு ‘சண்டக்கோழி 2’ தொடங்க உள்ளது. இதே பாணியில் மேலும் பல படங்களின் 2-ம் பாகம் உருவாக்குவது பற்றி ஆலோசனை நடக்கிறது.


.................................................................................................................................................................
kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விரைவில் இசை பள்ளி ஆரம்பிக்க உள்ளேன் : சோனியா அகர்வால் 
சோனியா அகர்வால் கூறியது: 'திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மவுசு குறைவது சகஜம். சிலர் மீண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் எதிர்பாராதவை. மீண்டும் சினிமாவில் ஹீரோயின் வேடம் எதிர்பாராதது என்றாலும் எனது காத்திருப்புக்கு கிடைத்த பலன், ‘வானம்’ படத்தில் சிறிய வேடம். ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் ஹீரோயின். இதில் 4 மாறுபட்ட மேக் அப் அணிகிறேன். இதனைத் தொடர்ந்து விரைவில் இசை பள்ளி ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன்' என்று கூறினார்


..................................................................................................................................................................

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோச்சடையானுக்காக சென்னை வந்தார் தீபிகா 
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோ. அவர் ஜோடியாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்டுக்காக தீபிகா படுகோன் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது.

"படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். தனது தோற்றம் மாற்றப்படுவதற்கு தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். உடல் அசைவுகள் தெளிவாக வரவேண்டும் என்பதற்காக தீபிகாவை ஸ்கேன் செய்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முறையாக ‘பெர்பாமன்ஸ் கேப்சரிங்’ என்ற நவீன டெக்னாலஜி இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.

மேலும் இதில் சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் மூன்று நிமிட காட்சி இடம்பெற இருக்கிறது. சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்க இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகள் ஷூட்டிங்கிற்காக படக்குழு லண்டன் செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக