திங்கள், டிசம்பர் 31, 2012

"பாலியல் பலாத்காரம் : வீதிகளில் குத்தாட்டம்; குடும்பத்துக்கு 100 கோடி கேட்டு போராட்டம்!


Jan1, டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இளம்பெண் மரணமடைந்தார். இதற்க்கு தீர்வு கேட்டு, டெல்லி வீதிகளில் ஆண்களும் பெண்களும் குத்தாட்டம் போடுவது - கும்மாளம் அடிப்பது, மேலும் பல பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. கடந்த டிசம்பர் 16ந்தேதி, மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்துவதை குறை கூறமுடியாது, என்றாலும் அதில் ஆண்களும் பெண்களும் குத்தாட்டம் போட்டு கும்மாளம் அடிப்பதை சகிக்க முடியவில்லை. தற்போது, மாணவி இறந்துவிட்ட நிலையிலும் இந்த குத்தாட்டங்கள் குறைந்த பாடில்லை. நேற்று, குத்தாட்டத்துடன் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துக்கொண்ட ஒரு அமைப்பு, வீர மரணமடைந்த மாணவியின் குடும்பத்துக்கு, உடனடியாக ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும், என குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

வெள்ளி, டிசம்பர் 28, 2012

பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி உயிரிழந்தார்


டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதாக மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் லோ தெரிவித்தார். ஏற்கனவே அவருக்கு சுவாச பிரச்சினை தவிர, நுரையீரல் மற்றும் வயிற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் கெல்வின் லோ கூறியிருந்தார். தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்தார். இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு அந்த மாணவியின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த சமயத்தில், அவரது பெற்றோரும், இந்திய தூதரக அதிகாரிகளும் அருகில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில், மாணவியின் மரணத்தால் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், அதிகளவு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன், டிசம்பர் 27, 2012

‎5 வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம்


5 வருடங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆயிஷா மீரா என்பவரது குடும்பம் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் நீதிக்காக காத்திருக்கிறது. பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்த படி தனது உயிருக்கு போராடி வரும் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவிக்காக குரல் கொடுக்க ஏராளமான ஊடகங்களும்,மனித உரிமை ஆர்வலர்களும் தேசத்தின் தலைநகரில் ஆர்பாட்டம் நடத்திஅரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.ஆனால் விஜயவாடாவில் இதே போன்று பாதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகும் நீதிக்காக காத்திருக்கிறார்கள். சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு,அதாவது டிசம்பர் 26, 2007 ல் ஆயிஷா மீரா, என்ற 19 வயது மருந்தியல் மாணவியை ,அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதியில் உள்ளே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது. இந்த பெண் ஆபாசமாக உடை அணிய வில்லை.ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சுற்றித்திரிய வில்லை.மதுவினில் ஊறி திளைக்கவில்லை. ஆனால் தான் தங்கியிருந்த பெண்களின் விடுதியினிலே வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள்.காரணம் முஸ்லிம் பெண் என்பதனால் ,கேட்பதற்கு நாதியில்லை என்பதனால்,அதேபோல் நீதியும் இன்றுவரை அக்குடும்பத்திற்கு மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தலித் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் நீதி மறுக்கப்பட்டு வருகிறது,இதற்கு தமிழகம் நல்ல உதாரணம்.

மாணவியின் துணிச்சலான வாக்குமூலம்


புதன், டிசம்பர் 26, 2012

டிசம்பர் 26


டிசம்பர் 26, ஆழிப் பேரலை, சுனாமி என்ற வார்த்தைகளை கூட அறியாத மக்களுக்கு ராட்ச உருவமாய் அந்த வார்த்தைகள் காட்சி அளித்த நாள். கடல் பொங்கி எழுந்து சீற்றமுடன் பலரை விழுங்கிய நாள் , பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் கடல் அலைகள் விட்டுவைக்கவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனை பறிகொடுத்த மனைவி, குழந்தைகளை பலி கொடுத்த பெற்றோர் என மனதை உருக்கும் பிரிவுகள் நொடியில் நடந்து முடிந்தன. சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு இந்த நாளில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறோம் :-

ஆசிட் வீச்சில் அலங்கோலமாகி உதவியின்றி தவிக்கும் வினோதினி.. கண் திறக்குமா அரசுகள்!


சென்னை: எல்லோரும் டெல்லி பாலியல் பலாத்காரத்தைப் பற்றி மட்டுமே வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காதலை ஏற்க மறுத்த குற்றத்திற்காக ஆசிட் வீச்சிற்கு ஆளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கும் புதுச்சேரி வினோதினியின் அவல நிலை எந்த அரசாங்கத்தின் கண்ணுக்கும் தெரியவில்லை. பண வசதியின்றி பரிதவித்துக் கலங்கிப் போய் நிற்கிறார் வினோதினி. காரைக்கால் நகரில் வசித்து வரும் ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி. சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது அவரை ஒருதலையாக காதலித்த சுரேஸ் என்ற கட்டிட தொழிலாளி, ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான். கண் நரம்புகள் பொசுங்கிப் போனதால் வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு அவரது முகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், டிசம்பர் 25, 2012

அமெரிக்காவில் தாமதமாக வந்ததால் 2 தீயணைப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை-


டிசம்பர் 25,- நியூயார்க் நகரில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு டெலிபோன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வர கால தாமதமானது. இதனால் தீ அருகே இருந்த மற்றொரு வீட்டுக்கும் பரவியது. எனவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்களை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை


டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளான மருத்துவக் கல்லூரி மாணவி சிகிச்சைக்காக டெல்லி சப்தர்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு வயிற்றிலேயே 6 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது வயிற்றில் சிறுகுடல் பகுதியில் இந்த ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. சேதம் அடைந்த குடல்பகுதி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் ரத்தக் கசிவும், தொற்றும் ஏற்பட்டுள்ளது. ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருப்பதால் ரத்தப்போக்கு அபாயம் உள்ளது. இதனால் உடல் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும், 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை எப்போதும் காய்ச்சல் இருந்து கொண்டே இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவிக்கு இன்னும் செயற்கை சுவாசம்தான் பொருத்தப் பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவியின் உடல்நிலை குறித்து, சப்தர்ஜங் ஆஸ்பத்திரி டாக்டர் பி.கே. வர்மா கூறுகையில் அவர் மனதளவில் திடமாக இருக்கிறார். சுய நினைவுடன் பேசுகிறார். அவரை உட்கார வைத்து சிறிது தண்ணீர் கொடுத்தோம். அமர்ந்த நிலையில் மாணவியின் கால் பகுதிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

ஞாயிறு, டிசம்பர் 23, 2012

டெல்லியில் இரண்டாவது நாளாக பதற்றம் தொடர்கிறது

டெல்லி இந்தியா கேட் பகுதியில் இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நேற்று காலை முதல் இரவு வரை பல முறை போலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போராட்ட காரர்களை கலைக்க முயற்சித்து வருகின்றனர். பதற்றத்தை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாது மீண்டும் இந்தியா கேட் முன்பாக ஆயிரக்கணக்கானோர் கூடி ராஷ்டிரபதிபவனை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் நடத்தப்பட்டன. இந்நிலையில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரிலும் ராம்லீலா மைதானத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றனர். பாபா ராம்தேவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் போராட்ட காரர்கள் குழுவினரை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இதேவேளை, ஆர்ப்பாட்டட்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் போலீஸாரை கட்டுப்படுத்தும் படி, பாஜக மூத்த தலைவர் அத்வானி தொலைபேசி மூலமாக, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த டெல்லி மாணவி, தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனி, டிசம்பர் 22, 2012

கோவை அபுதாஹீர் நிலையை பாரீர்,...!!!


பல வருடங்களாக சிறையில் இருக்கும் நாம் சகோதரனின் நிலை பாரீர்..!! பல மாதங்களாக மருத்துவ சிறையில் உயிருக்கு போராடும் நாம் சகோதரனின் நிலை பாரீர்..!! தினம் தினம் புது புது ரத்தத்தை மாற்றி மாற்றி உடலில் புகுத்தி சித்தரவதை செய்யும் நாம் சகோதனின் நிலை பாரீர்..!! அந்த ரத்தம் என் சகோதரனை விட்டு வெளியேருவதையும் பாரீர்..!! இந்த தேசத்தில் ஒரு சமூகத்தை சீர்ழிக்கும் இளைஞரை பாரீர்..!! சட்டம் பாரேல் கொடுக்கலாம் என்று சொல்லியும் அதை மறுக்கும் மனித நேயமில்ல தமிழக காவல்துறையின் பழிவாங்கும் நோக்கத்தை பாரீர்..!! தமிழக அரசே !! தமிழக அரசே..!! மனித நேயம் உள்ள அரசாக மாறு…!! ஒரு அப்பாவியின் உயிரை காப்பாற்றுவது உங்கள் கடமையல்லவா.? சிறைஎன்பது மனிதனை திருத்தவே ,,!! அந்த மனிதனை அழிக்க அல்ல,,? கோவை சிறை மருத்துவமனையில் இருக்கும் எங்கள் சகோதரனை விடுதலை செய்..விடுதலை செய்,,,மனிதநேயத்துடன் விடுதலை செய்,,!! காப்பாற்று காப்பாற்று அபுதாஹீரை உயிர் போகும் முன் உயிரை காப்பாற்று.. அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் அபுதாஹீரை காப்பாற்றுவது உறுதி ..செய்வார்களா ? அபுதாஹீரை காப்பாற்றுவார்களா..? அல்லாஹ்வின் உதவியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் புரட்சியுமே அப்பாவி அபுதாஹீரை காப்பாற்ற முடியும்..இன்ஷா அல்லாஹ்…… ( இன்று நானும் தடா ரஹீம் அவர்களும் கோவையில் மருத்துவ சிறையில் இருக்கு அபுதாஹீரை பார்த்து பிரிய மனமில்லாமல் நடைபிணமாய் மனஊமையாய் மரித்துப்போன எங்கள் உடல்)

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை! - முதல்வருக்கு அமீர் கோரிக்கை


தூத்துக்குடி அருகே 13 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற கொடியவர்களுக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை வழங்குங்கள் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: தலைநகர் டெல்லியில் கடந்த 16-ம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் உலுக்கு உறைய வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த கொடிய செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளுக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அதனை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டும். இது இத்தகைய குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக அமையும். இதுபோன்ற கேவலமான குற்றச் செயல்களில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது தலைநகர் டெல்லி என்பது 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு உலக அரங்கில் மிகப் பெரிய தலைகுனிவு மட்டுமல்ல, அவமானமும் கூட என்பது நிதர்சன உண்மை. இந்த கொடிய நிகழ்ச்சி நம் நெஞ்சை விட்டு மறைவதற்குள், நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தில் 7-ம் வகுப்பு படித்த மாணவி புனிதா மிகக் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இக்கொடிய செயலைச் செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவி சம்பவத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கும் டெல்லி அரசுக்கு தமிழக முதல்வர் வழிகாட்டி இந்தியாவுக்கே உதாரணமாகத் திகழவேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

செவ்வாய், டிசம்பர் 18, 2012

"தொலைபேசியும் முஸ்லீம் பெண்களும்!"


முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது.இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கானகாரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம். இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள், 1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது. 2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது. 3. மொபைல் ஃபோனில் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது. 4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது. 5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது. 6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது) 7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது. 8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது. நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள், திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ''இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்''. (அல்குர்ஆண்: 24:37) ''நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32) 1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள். 2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். 3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு(அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். 4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது. 5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது. 6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க வேண்டாம். 7. தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே. 8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே. 9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம். 10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும். 11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன. 12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள். 13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும். 14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும். 15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள். அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை, பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்

உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது


உலக அழிவு குறித்து அச்சத்தை உருவாக்கும் வண்ணம் வதந்திகள் பரப்பியதாக சீனாவில் 93 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் உலகம் அழிந்து விடும் என்ற தீர்க்கதரிசனங்களால் ஏற்பட்ட பயத்தில் ஒரு பாடசாலைக்குள் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய மன நிலை பாதிக்கப் பட்ட ஒரு ஆடவரும் அடங்குகின்றார். இந்த 93 பேரும் சீனாவின் 7 மாகாணங்களில் இருந்து கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சீனாவில் தடை செய்யப்பட்ட 'அல்மைட்டி கோட்' எனும் மரபின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இவர்கள் வீதிகளில் சென்று கொண்டிருந்த பொது மக்களிடம் உலக அழிவு குறித்து துண்டுப் பிரசுரங்களையும் எச்சரிக்கைகளையும் விநியோகித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்மைட்டி கோட் உறுப்பினர்களின் முக்கிய எச்சரிக்கையாக டிசம்பர் 21 ஆம் திகதி மாயன் தீர்க்கதரிசனப்படி சூரியன் வானில் தென்படாது எனவும் மூன்று நாட்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்பதும் வதந்திகளாகப் பரப்பப் பட்டதாக சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மின் யோங்ஜுன் எனும் ஆடவர் அருகிலுள்ள பள்ளியில் புகுந்து 23 சிறுவர்களைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டுள்ளார். இவர் உலக அழிவு குறித்த தீர்க்கதரிசனங்களால் கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர் என பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.


1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். 2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் 6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும். 7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும். 8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். 9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும். 10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும் 11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

திங்கள், டிசம்பர் 17, 2012

ரயில்வேகேட்டை கடக்கமுயன்ற சுமோமீது விரைவுரயில் மோதி இருவர்பலி


கும்பகோணம் டிசம்பர் - 17 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சன்னாபுரம் செல்லும் சாலையில் ஆண்டளாம்பேட்டை கிராமத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ஹாரன் அடிக்காமல் ஆண்டளாம்பேட்டை ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்து செல்ல முற்படும்போது திருப்பனந்தாள் திருவாய்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த டீக்கடை வைத்திருப்பவர் விஜயகுமார் (33). அவருடைய நண்பர் ஓட்டுநர் முருகராஜ் (30). இருவரும் தங்களது உறவினர் வீடு இருக்கும் மாசனக்குடிக்கு திருவாய்ப்பாடியிலிருந்து டாடாசுமோவில் சென்றுள்ளனர். திருவிடைமருதூர் சன்னாபுரம் சாலையில் உள்ள ஆண்டளாம்பேட்டை ஆளில்லா ரயில்வே கேட்டை கோவை விரைவு ரயில் வரும்பொழுது ஹாரன் ஒளி கேட்காததால் ரயில்வே கேட்டை ரயில்வருவது தெரியாமல் சுமோ கடந்தபோது கோவை விரைவு ரயில் டாடாசுமோவில் மோதி சுமோவில் வந்த விஜயகுமார், முருகராஜ் 100அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். முருகராஜீக்கு ராசாத்தி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். விஜயகுமாருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆளில்லா ரயில்வே கேட்டில் சுமோ மீது ரயில் மோதிய சம்பவர் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு பணம் பதுக்கப்படுவதை தடுக்க புதிய சட்டமூலத்தை உருவாக்கும் முயற்சியில் சுவிஸ் அரசு


சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்குவதை தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு சுவிற்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்டத்தை இயற்றுவது தொடர்பில் வரைவு மசோதாவை அளிக்குமாறு பெடரல் கவுன்சில் அந்நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி செலுத்தாத பணத்தொகை சேமிப்பு தொடர்பிலான பிரச்சினைகளை ஒடுக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி உள்ளிட்ட 700 பேர் சுவிற்சர்லாந்தின் HBSC வங்கி கிளைகளில் ரூ.6000 கோடி அளவுக்கு கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால் பரபரப்பு புகார் விடுத்திருந்தார். மேலும் சுவிற்சர்லாந்தில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

புதன், டிசம்பர் 12, 2012

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்தால் டிஸ்மிஸ்! : தமிழக அரசு


எச்சரிக்கைகளை மீறி, பள்ளி படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியில் பேருந்து மீது லாரி மோதியதில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார். இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். இதில், பள்ளி பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க கல்லூரிகள், பள்ளிகளில் விழிப்புணர்வு செய்யப்படும். நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் பேரு‌ந்துக‌ள் இயக்கப்படும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் தண்டனை விபரம் பற்றி பிரச்சாரம் செய்யப்படும். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இதுபற்றி மாணவரின் பெற்றோருக்கும், பள்ளிக்கும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து பேரு‌ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பிறகு அவர்களை பள்ளியில் இருந்து நீக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. குறைவான பேருந்து சேவைகளும், அதிகளவிலான சன நெருக்கடி, இடப்பற்றாக்குறை என்பவையும் கூட, பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணிப்பதை தூண்டிவிடுவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய், டிசம்பர் 11, 2012

11.12.2012 காலை 6 மணியளவில்

11.12.2012 காலை 6 மணியளவில் பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள ஓம் க்தி நகர் பள்ளிவாசலில் உள்ள ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகளை இந்து துவா சிந்தனயுள்ள பாசிஸ்டுகள் கற்களை கொண்டு வீசி உடைத்துள்ளனர். தொடந்து ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல்கள் (பாரதிநகர் மார்கஸ், குமாரயா கோவில் புகாரிய பள்ளி, செய்யது அம்மாள் பள்ளிவாசல்) மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் காவல்துறையோ சமூக நல்லிணக்கத்தில் பாரா முகமாய் செயல்பட்டு வருகிறது. உடனே பாப்புலர் ப்ரன்ட். ஆப் இந்தியா, த.மு.மு.க, ஐ.என்.டி.ஜெ, போன்ற முஸ்லிம்கள் அமைப்புகள் ஒன்று கூடி கலக்டர் அலுவலகத்திற்கு சென்று வாசலில் அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தனர். முஸ்லிம் சமூகமே விழித்து கொள்.!

காதல் என்ற போர்வையில் சீரழிக்கப்படும் இஸ்லாமிய பெண்கள்.... அஸ்மா பர்வின் பொட்டு வைத்து பெற்றோரை தூக்கி எறிந்த காட்சி..... காண்பவர்களுக்கு அதிர்ச்சி..