வியாழன், ஜனவரி 26, 2012

குடியரசு விழா: விருந்தினரான ஆசியாவின் 4-வது தலைவர்


குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆசியாவின் 4-வது தலைவர்
 1/1 
புதுடெல்லி,ஜன.27 - இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக ஆசியா கண்டத்தில் இதுவரை 4 தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் சுதந்திர தினம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவின் 63-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்டு பார்வையிட தாய்லாந்து நாட்டு பெண் பிரதமர் யிங்லுக் ஷினவத்ரா கலந்துகொண்டார். தாய்லாந்து நாட்டில் இருந்து கலந்துகொண்ட முதல் பெண் பிரதமர் இவர்தான். இந்திய குடியரசு தின விழாவில் இதுவரை 3 பெண் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 1961-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதனையடுத்து 1974-ம் ஆண்டு இலங்கை பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தாய்லாந்து பிரதமர் யிங்லுக் ஷினவத்ராவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத்திற்கு ஜனாதிபதி பிரதீபாட்டீலுடன் யிங்லுக் வந்தார். அவரை முக்கிய பிரமுகர்கள் இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நமஸ்தே கூறி வரவேற்றார். யிங்லுக்வும் பதிலுக்கு நமஸ்தே கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக