திங்கள், ஜனவரி 30, 2012

சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் இன்று முதல் இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.



இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இருசக்கர வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதல் முறை பிடிபடும் போது 100-ரூபாயும், அதற்கு அடுத்த ஒவ்வொரு முறையும் 300-ரூபாயும் வசூலிக்கப்படும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால், முதல் முறை 2 -ஆயிரத்து 500-ரூபாய் வசூலிக்கப்படும்.
இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறை அதே தவறுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும். அபாயகரமாக வாகனம் ஓட்டினால் 1000 ரூபாயும், மீண்டும் தவறு செய்தால் 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும்.
அதிவேகமாக வாகனம் ஓட்டினால், 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தலைக் கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டி, முதல் முறை பிடிபட்டால் 100 ரூபாயும், அடுத்தடுத்த முறைகளில் 300 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டத் தவறினால், 100 ரூபாயும் அடுத்தடுத்த முறைகளுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும். இந்தப் புதிய உத்தரவு, சென்னை மாநகரில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக