திங்கள், ஜனவரி 30, 2012

இந்தியா-பாக். இடையே நல்லுறவு கட்டாய தேவையாகும்: கிலானி


 1/1 

தேவோஸ்,ஜன.- 30 - இந்தியாவுடன் நல்லறவு கட்டாய தேவையாகும் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.  தேவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் சென்றுள்ளார். இந்திய விஞ்ஞானம்,தொழில்நுட்ப இணை அமைச்சர் அஷ்வினி குமாரும் அங்கு சென்றுள்ளார். இரண்டு பேரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் கிலானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது கட்டாய தேவையாகும் என்றார். இந்தியாவுடனான இதர பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் உள்துறை செயலாளர் விரைவில் புதுடெல்லி செல்வார். இந்தியா-பாகிஸ்தான் இடையே விரைவில் நல்லுறவு ஏற்படும் என்றும் கிலானி கூறினார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நல்வாழ்த்துக்கள் கூறியதாக தெரிவிக்கும்படியும் அமைச்சர் குமாரை கிலானி கேட்டுக்கொண்டார். மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி ஹர், இம்ரான் கான் ஆகியோர்களையும் அமைச்சர் குமார் சந்தித்து பேசினார். தாய்லாந்து, டென்மார்க், பின்லாந்து, ஆகிய நாடுகளின் பிரதமர்களும் சர்வதேச நிதியுதவி ஸ்தாபன தலைவர் கிறிஸ்டின் லாகார்டீ, உலக வர்த்தக அமைப்பு இயக்குனர் ஜெனரல் பஸ்கல் லாமி, உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயல்லிக் மற்றும் முக்கிய தலைவர்களும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக