சனி, பிப்ரவரி 18, 2012

இலங்கை போர்க் குற்றம் குறித்து ஐ.நா. கூட்டத்தில் விவாதம்

ஜெனீவா: இலங்கை போர்க் குற்றம் குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் விவாதம் நடந்தது. ஐநா.வின் மனித உரிமை ஆணையக் கூட்டம் சுவிஷ் நாட்டின் ஜெனீவா நகரில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி மரியா ஒட்டேரோ இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து பேச்சு நடத்தினார். மேலும் மனித உரிமை மீறல் பற்றிய இலங்கை அரசு ஆணைய பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் 'காலம் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னும் இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கவில்லை' என்று அவர் கருத்து தெரிவித்தார்.

ஐ.நா.பிரதிநிதியின் கருத்து

ஐ.நா. மனித உரிமை ஆணைய நவிபிள்ளை இலங்கைப் பிரச்சனை பற்றி பேசினார். அப்போது 'இலங்கை அரசு நியமித்த கமிஷன் அறிக்கை மட்டும் பிரச்சனைக்கு தீர்வாகாது' என்று கூறிய அவர் 'எனினும் கமிஷனின் பரிந்துரைகளை இலங்கை உடனே நிறைவேற்ற வேண்டும்' என்று நவிபிள்ளை வலியுறுத்தினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக