செவ்வாய், மார்ச் 13, 2012

சங்கரன்பந்தல் வயலில் பஸ் கவிழ்ந்தது

இன்று (13/03/20012) காலை 10:30 மணி அளவில் கும்பகோணத்திலிருந்து பொறையார் சென்ற சமீர் பேருந்து அரும்பாக்கம் அருகில் நல்லாடை முக்கட்டுக்கு கொஞ்சம் முன்னால் கவிழ்ந்தது. இன்று 10:30 மணி அளவில் சமீர் பஸ் அரும்பாக்கத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தது. முப்பதுக்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னால் வந்த லாரிக்கு இடம் கொடுப்பதற்காக வலது பக்கமாக ஒதுங்கிய வண்டி அப்படியே சறுக்கி வயலில் கவிழ்ந்தது. பத்து பதினைந்து பேருக்கு அடி. இவர்களுக்கு சிகிக்சை அளிப்பதற்கு சங்கரன்பன்தல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கபட்டது

. இவர்களில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு நல்ல அடி என்பதால் மயிலாடுதுறை மருத்துவமனையில் சேர்க்குமாறு டாக்டர் கூறியதின் பேரில் அவர்கள் மயிலாடுதுறை கொண்டு செல்லப்பட்டனர். இறையருளால் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. பஸ்ஸை ஓட்டிவந்தது கண்டக்டர் என்று சொல்லப்படுகிறது . டிரைவரும் , கண்டக்டரும் ஸ்பாட்டிலிருந்து வழக்கம் போல் எஸ்கேப். 20 பேர் சிறு காயங்களுடன் சங்கரன்பந்தல் மருத்துவமனையில் சேர்க்க பட்டனர் இதில் பயணம் செய்த திருவிளையாட்டம் , கடலி , வாழ்கை சேர்ந்தவர்கள் இதில் 6 நபர்களுக்கு அதிக காயங்களுடன் தலையில் அடிபட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் 6 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பலத்த காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக