செவ்வாய், ஏப்ரல் 10, 2012

உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை தடை கோரி மனு

சென்னை, ஏப்.10 - ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஏப்ரல் 13 தேதி வெள்ளித்திரையில் வெளிவரும் நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து தர்மா சக்தியின் செயலாளர் தேவசேனாதிபதி என்பவர். இந்து மதத்தை சேர்ந்தவர்களை கொச்சைபடுத்தி, அவர்களின் மனம் புண்படும் வகையில் இப்படத்தில் காட்சிகள் உள்ளதால், இந்த படத்தை வெளியிட தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் மனுவில் கூறியிருப்பதாவது:- `` ஒரு கல் ஒரு கண்ணாடி '' என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாகியாகவும் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் காட்சிகளை டிவிகளிலும் திரையரங்கங்களிலும் சமீப காலமாக காண்பித்து வருகின்றனர். அதில் உளுந்தூர்பேட்டை உலகானாந்தா என்ற பாத்திரத்தில் சாமியார் வேடம்போட்டு நடிக்கும் காட்சியில் சாமியார்களை அவமானப்படுத்தும் வகையிலும் வசனங்கள் உள்ளது. ஒரு சாமியார் தவறு செய்தார் என்பதை வைத்து அனைத்து சாமியார்களையும் அதே நிலையில் வைத்து வசனம் அமைத்திருப்பது, காட்சிகளை அமைத்திருப்பது, பெரும்பாலான இந்து மதத்தினரின் மனதை துன்புறுத்துவதாக உள்ளது ஆகவே இந்த படத்திற்கு சென்சார் அனுமதிக்க கூடாது. படத்தை தடை செய்ய வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி வினோத்குமார் சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முன் தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக