சனி, மே 12, 2012

ஜூன் -4ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். கடந்த ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வுகள் 23-ந் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களைத் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 4-ந் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 22-ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக