திங்கள், மே 28, 2012

ரியாத்-மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் என்ஜினில் தீ: பயணிகள் தப்பினர்!


மும்பை: செளதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இருந்து மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கியதும் அதன் இடது புற என்ஜினின் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் என்ஜின் முழுவதுமாக எரிந்து நாசமானது. ஜெட் ஏர்வேசின் 9w523 எண் விமானம் இன்று காலை 5.40 மணிக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பை விமான நிலையத்தில் அவசரமாகக் தரையிங்கியது. 5.50 மணியளவில் ரன்வேயில் இருந்து டேக்ஸி வே பகுதிக்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டு என்ஜினின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதையடுத்து அதிலிருந்த 158 பயணிகளும் அவசரமாகத் தரையிறக்கப்பட்டனர். தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்த தீயை அணைப்பதற்குள், அந்த என்ஜின் முழுவதுமாக எரிந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக