வெள்ளி, மே 25, 2012

அதிபர் தேர்தல்: ஆர்வமுடன் வாக்களித்த எகிப்து மக்கள்


கெய்ரோ, மே. 25 - ஆப்பிரிக்க நாடான எகிப்து அதிபர் தேர்தல் நடந்தது. இதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர். எகிப்தில் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட புரட்சியால் தனது 20 ஆண்டு கால பழைய பதவியில் இருந்து விலகினார். அவர் மீது பல்வேறு ஊழல் முறைகேடு குற்றசாட்டுகள் உள்ளன. முபாரக் பதவி விலகியதும் நடைபெறும் தேர்தல் என்பதால் இது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. அதற்கேற்ப எகிப்து மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தல் 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் 13 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால் 5 வேட்பாளர்களிடம்தான் கடும் போட்டி நிலவியது. இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அமர்மவுசா, முன்னாள் பிரதமர் அகமது ஜாபிக், இஸ்லாமிய கட்சிகளின் முகமது மோரீஸ், அபு அல் முனீம், கமாதீன் ஷெபாகி ஆகியோர் முக்கியமானவர்கள். வரும் 29 ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. புதிய அதிபர் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பதவியேற்பார் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக