வியாழன், மே 31, 2012

ரஷ்ய அதிபர் புதின் படத்தின் மீது எச்சில் துப்பிய வாலிபருக்கு சிறைத்தண்டனை.


ரஷ்யாவில் ஆர்ப்பாட்டத்தின் போது அதிபர் விளாடிமிர் புடின் படத்தின் மீது எச்சில் துப்பியவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெற்று பதவியேற்றார். தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக கூறி புடினுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மாஸ்கோவில் கடந்த 7ம் தேதி ஐக்கிய ரஷ்ய கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற திமித்ரி கருயேவ் என்ற 20 வயது வாலிபர், திடீரென புடின் படத்தின் மீது எச்சில் துப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ÔÔபொது இடத்தில் ஒழுங்கீனமாக திமித்ரி நடந்து கொண்டார்ÕÕ என்று வாதிட்டார். இந்த குற்றச்சாட்டை மறுத்த திமித்ரி, எனக்கு அடிக்கடி தும்மல் வரும். ஆர்ப்பாட்டத்தின் போது தும்மினேன். புடின் படத்தின் மீது எச்சில் துப்பவில்லை என்று கூறினார். இவரது வக்கீல் கூறுகையில், ÔÔதிமித்ரியின் செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அடிக்கடி தும்முவது அவரது இயல்புÕÕ என்றார். அதை ஏற்க மறுத்த ரஷ்ய கோர்ட், திமித்ரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து இன்டர்நெட்டில் ஏராளமானோர் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக