திங்கள், ஜூன் 04, 2012

நைஜீரியாவில் கட்டிடத்தின் மீது விமானம் மோதி 147 பேர் பலி


அபுஜா: நைஜீரியாவில் மக்கள் தொகை அதிகமுள்ள லாகோஸில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதி்ல் இருந்த 147 பேரும் பலியாகினர். நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இருந்து பயணிகள், விமானிகள் என்று 147 பேருடன் தனியார் பயணிகள் விமானம் மெக்டான்னல் டக்லஸ் எம்டி-83 நேற்று லாகோஸுக்கு புறப்பட்டது. அந்த விமானம் பிற்பகல் 2.44 மணி அளவில் லாகோஸ் முர்தலா முகமது விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 147 பேருமே பலியாகினர். விமானம் மோதிய இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். மீட்பு பணியை மேற்கொள்ள மக்கள் இடையூறாக இருந்ததால் அவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்டார்கள். அதன் பிறகு மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த தகவல் அறிந்த நைஜீரிய அதிபர் குட்லக் ஜானதன் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள பாரில் டிவி பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர் செய்தியாளர் டிமோத்தி கூறுகையில், திடீர் என்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. நாங்கள் முதலில் அது கேஸ் சிலிண்டர் தான் வெடித்துவிட்டது என்று நினைத்தோம். அதன் பிறகு தொடர்ந்து வெடி சத்தம் கேட்டதையடுத்து அனைவரும் வெளியே வந்து பார்த்தோம். மக்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். விமானம் எரிந்து கொண்டிருந்தது என்றார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்த தனியார் விமான

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக