சனி, ஆகஸ்ட் 18, 2012

பர்மாவில் கொலைவெறி தாக்குதல் தொடுக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டும்..............!!

வந்தாரை வாழ வைக்கும் இந்திய மண்ணில் பர்மாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்கையை கொடுக்க வேண்டும், இந்திய பாரத தேசம் மதச்சார்பற்ற மக்களால் சூழப்பட்ட, மனிதநேயம் நிறைந்த மக்களால் பின்னப்பட்ட இந்த மண்ணில் எத்தனையோ... எத்தனையோ மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வாழ்கையை கொடுத்த இந்த தேசம்.... நமது இந்திய எல்லையை ஒட்டிய பர்மா மக்களுக்கும் அனுமதி வழங்கி இந்தியாவில் அடைக்கலம் கொடுத்து தாயை போல் அரவணைக்க வேண்டும், அவ்வாறு அரவணைத்து உலகிலேயே மனிதநேய மிக்கவர்களாக அரபுகளைவிட, ஐரோப்பியர்களை விட இந்தியர்கள் மனிதநேய மிக்கவர்கள் என்பதை உலகிற்கு பறைசாற்ற வேண்டும், பாபர் மசூதியை இடித்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்த காவி பயங்கரவாதிகளால் ஏற்பட்ட இழிவு இன்று வரை மறையவில்லை.... அந்த இழிவை மீண்டும் துடைக்க வேண்டாமா.......? மனிதநேய அடிப்படையில் பர்மா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் உலகமே இந்தியாவை தன்னுடைய தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்து விடும், மேலும் இந்தியாவிற்கும், அரபுநாடுகளுக்கும் நட்புறவு இன்னும் அதிகரிக்கும், தலாய்லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா.... பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொடுக்க வேண்டும், காமசகதியில் புரளும் தஸ்லீமாவுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியா..... பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு அனாதைகளாய், நிராயுதபாணியாய் நிற்கும் மக்களுக்கும் தாயுள்ளத்தோடு அரவணைத்து அடைக்கலம் கொடுக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.... இந்தியா அடைக்கலம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன்.... nidurin.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக