ஞாயிறு, நவம்பர் 11, 2012

சென்னையில் தரைதட்டிய கப்பல் மீட்கப் பட்டது!


சென்னையில் தரைதட்டிய பிரதீபா காவேரி கப்பல் இன்று மீட்கப் பட்டது. நிலம் புயல் காரணமாக சென்னையில் பிரதீபா காவேரி என்ற கப்பல் தரைதட்டியது. இதில் இருந்து தப்பிக்க முயன்ற மாலுமிகளில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இக்கப்பலை மீட்க இந்திய அரசு பல வகைகளில் முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்த பலனுமில்லாமல் இருந்தது, இந்நிலையில் இன்று ஏழாவது முறையாக மேற்கொள்ளப் பட்ட முயற்சியில் கப்பல் ஆழ்கடலுக்குள் சென்றது. இதனால் மீட்புப் பணியில் இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் மீட்புப் பணியை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார். கப்பல் தரைதட்டிய பகுதி சுற்றுலாத் தலம்போல் காட்சி தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக