வெள்ளி, டிசம்பர் 28, 2012

பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி உயிரிழந்தார்


டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருவதாக மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கெல்வின் லோ தெரிவித்தார். ஏற்கனவே அவருக்கு சுவாச பிரச்சினை தவிர, நுரையீரல் மற்றும் வயிற்றில் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் கெல்வின் லோ கூறியிருந்தார். தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்தார். இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு அந்த மாணவியின் உயிர் பிரிந்தது. அவர் மரணமடைந்த சமயத்தில், அவரது பெற்றோரும், இந்திய தூதரக அதிகாரிகளும் அருகில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில், மாணவியின் மரணத்தால் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால், அதிகளவு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக