ஞாயிறு, நவம்பர் 03, 2013

சோகத்தில் முடிந்த சுற்றுலா…! கடலில் குளிக்கச்சென்ற நமதூர் வாலிபரை கடல் அலை அடித்துச்சென்றது.


பூம்புகார் கடல் அலையில் நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு PAM மாலிக் மகன் அல் நாசர் அடித்து செல்லப்பட்டார். கல்லூரி மாணவரான அல் நாசர் தனது நண்பர்களுடன் இன்று(02-11-2013) மாலை பூம்புகாருக்கு சென்று கடலில் குளித்தபோது இந்திய நேரம் மாலை சுமார் 4:30 மணிக்கு கடல் அலையில் அடித்து செல்லப் பட்டார். நீடூர்-நெய்வாசல் ஜமாஅத்தார்களும், பூம்புகார் சுற்று வட்டார இஸ்லாமிய இயக்க சகோதரர்களும், மீனவ நண்பர்களும் முழு வீச்சில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். உடல் பின்னிரவில்தான் கரை ஒதுங்கும் என்றும், பக்கத்து ஊர்களில் கரை ஒதுங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் மீனவ சகோதரர்கள் கூறுகின்றார்கள். சின்னங்குடி, தரங்கம்பாடி போன்ற பகுதிகளில் வசிப்போர் சந்தேகத்திற்கிடமான உடல் ஒதுங்கினால் அருகில் உள்ள காவல் துறை அலுவலகத்திற்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக