சனி, ஜனவரி 28, 2012

ராமர் கோயில் பிரச்சினையை மீண்டும் எழுப்பும் பா.ஜ.


உ.பி. சட்டசபை தேர்தலையொட்டி ராமர் கோயில் பிரச்சினையை பா.ஜ. மீண்டும் எழுப்புகிறது
 1/1 

லக்னோ,ஜன.29 - உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலையொட்டி ராமர் கோயில் பிரச்சினையை பாரதிய ஜனதா மீண்டும் எழுப்புகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று உறுதி அளித்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிர, பாரதியஜனதா,சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆட்சியை பிடிப்பதற்காக அரசியல் கட்சிகள் உறுதிமொழியை அள்ளிவீசி வருகின்றன. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இழந்த செல்வாக்கை பிடிக்க பாரதிய ஜனதாவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர்கோயில் கட்டாயம் கட்டுவோம் என்று அந்த கட்சி சார்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1980-ம் ஆண்டுகள் மற்றும் 90-ம் ஆண்டுகளில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருந்தது. மாநிலத்தில் தனியாகவும் கூட்டணியாகவும் ஆட்சி செய்தது. இதனால் இந்திய அரசியலில் பாரதிய ஜனதா முக்கிய பங்கு வகிக்க முடிந்தது. ராமர்கோயில் கட்ட வேண்டும் என்பது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடனானது. ராமா என்ற சின்னம் நாட்டின் கெளரவும் மற்றும் கண்ணியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ராமர் என்றாலே இந்தியாவுக்கும் இந்து மதத்திற்கும் பெரும் கெளரவமாகும். போலி மதசார்ப்பற்ற தன்மையாலும் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாலும் ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தடைகளையும் நீக்கி ராமர் கோயில் கட்டுவதில் பாரதிய ஜனதா உறுதியாக இருக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லக்னோவில் உள்ள பாரதிய ஜனதா மாநில தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர்களான உமாபாரதி, கல்ராஜ் மிஸ்ரா, முஹ்தர் அப்பாஸ் நக்வி, நரேந்திர சிங் தோமர், சுதீந்திர குல்கர்னி,சூர்யா பிரதாப் சாஹி ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்விகள் கேட்டதற்கு பதில் அளித்த சாஹி, நாட்டு மக்களின் வாழ்க்கை ஆதராமே இந்துமதம் என்று எங்கள் கட்சியின் கருத்தாகும். ஆனால் ஓட்டு வங்கிக்காக் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், இடதுசாரி கட்சிகள் எதிர்த்து வருகின்றன என்றார். மத ரீதியாக இடஒதுக்கீடு செய்வதை பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கிறது என்று மாநில பா.ஜ. தலைவர் ஓம் பிரகாஷ் சிங் பேட்டி அளிக்கையில் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக