செவ்வாய், ஜனவரி 31, 2012

கட்சத்தீவை திரும்பப் பெறுவதின் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்று ஆளுனர் ரோசய்யா தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், அடிக்கடி தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகி உள்ளதால், கட்சத்தீவை திரும்பப் பெறுவதின் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்று ஆளுனர் ரோசய்யா தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுனர் ரோசய்யா தொடக்க உரையாற்றினார். அப்போது தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

வரும் 12-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் ஒரு லட்சத்து 85-ஆயிரம் கோடி ரூபாயை திட்டப்பணிகளுக்காக அரசு செலவிட திட்டமிட்டுள்ளதாகவும், இது கடந்த ஐந்தாண்டு திட்டத்தை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதிலாக ரூபாய் ஆயிரம் கோடி செலவில் ஒரு லட்சம் காங்கிரட் வீடுகள் கட்டி தரும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று ஆளுனர் ரோசய்யா தமது உரையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று முல்லைப்பெரியாறு அணைவிவகாரம் குறித்து நடுவண் அரசின் அலட்சிய போக்காலும், குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட பரப்புரைகளாலும், பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தின் உரிமையை அரசு நிலைநாட்டுவதில் திட்டவட்டமாக உள்ளதாக ரோசய்யா தெரிவித்தார். மேலும் அணை தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், அடிக்கடி தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகி உள்ளதால், கட்சத்தீவை திரும்பப் பெறுவதின் மூலமே இதற்கு தீர்வு காணமுடியும் என்றும், மீனவர்கள் இழந்த உரிமையை மீட்க முடியும் என்றும் ஆளுனர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமின்றி, நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத்தடுத்து, நீடித்த பயந்தரும் சுற்றுச்சூழல் அஈர்கேட்டை தடுத்து, நீடித்த பயந்தரும் சாலைகளை அமைக்க விவானதொரு திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரோசய்யா அறிவித்துள்ளார்.
தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் தொன்மையான பண்பாட்டைப்பாதுகாக்கவும், நடவடிக்கை எடுத்துவரும் அரசு தமிழ்மொழியை நடுவன் அரசினின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தும் என்று ரோசையா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக