திங்கள், மார்ச் 12, 2012

மலேசியாவில் திருமணமான ஒரு மணி நேரத்தில் புதுப்பெண்ணை விவாகரத்து செய்த மணமகன்.


கோலாலம்பூரில் லீ (23) என்பவர், தனது 27 வயது காதலியான வாங் என்பவருடன் திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு, கார் டீலர் ஒருவர் வந்துள்ளார். டீலரை கண்டவுடன் தனக்கு உடனடியாக புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு லீயிடம் வாங் கேட்டார். அதற்கு லீ மறுப்பு தெரிவித்தார்.


இதனால் இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இவர்களின் வாய்த்தகராறு முற்றி, கார் வாங்கித் தராவிட்டால், விவாகரத்து செய்துவிடுவதாக வாங் மிரட்டினாள்.

இவ்வளவு பிடிவாதமான மனைவி தனக்கு வேண்டாம் என லீ முடிவெடுத்துள்ளார். பின், அவர்கள் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான மனுவை பூர்த்தி செய்துள்ளனர். விரைவில் அவர்களுக்கு முறைப்படி விவாகரத்து கிடைக்க உள்ளது. புது மனைவி கார் கேட்ட காரணத்தினால், திருமணமான 1 மணிநேரத்திலேயே, கணவர் விவாகரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக