ஞாயிறு, மார்ச் 18, 2012

ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் : ஆர்.எஸ்.எஸ்

புது தில்லி : இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நாவில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தும் நிலையில் அதற்கு முரணாக இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
இது தொடர்பாக தன்னுடைய பத்திரிகையான ஆர்கனைஸரில் தலையங்கத்தில் தங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விடும் மேற்கத்திய நாடுகளின் போக்குக்கு இந்தியா பலியாகி விடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் நடந்த புலிகளுக்கு எதிரான போரில் அனைத்து போர் விதிமுறைகளையும் மீறி புலிகளையும் பொதுமக்களையும் கொன்றொழித்த சிங்கள ராணுவத்தின் செயல்கள் சேனல் 4 தொலைக்காட்சியின் மூலம் வெளியாகியுள்ள நிலையில் திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இத்தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக