திங்கள், ஏப்ரல் 30, 2012

நேபாளத்தின் தெற்கு பகுதியில் குண்டு வெடித்து 4 பேர் பலி

காத்மாண்டு, மே - 1- நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் சுறுசுறுப்பான சந்தை பகுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தெற்கு பகுதியில் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ஜனக்பூர் என்ற நகரில் நேற்று காலை ஒரு மார்க்கெட் பகுதி சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அந்த சந்தையில் திரளாக கூடியிருந்தனர். அப்போது திடீர் என்று பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடித்ததில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வெடி குண்டு வெடித்ததையும் 4 பேர் பலியானதையும் நேபாள போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த வெடி குண்டு யாரால் வைக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இச்சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக