செவ்வாய், ஏப்ரல் 17, 2012

இந்தியாவில் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

கடன் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதை விட அபிவிருத்தியை ஊக்குவிப்பதென்பதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைப்பது என்பது கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே முதல் முறை. 2010 மார்ச் மாதம் முதல் இந்த வட்டி விகிதம் 13 தடவைகளில் உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலக பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சியை சந்தித்திருக்கவில்லை என்ற சூழ்நிலையில், பொருளாதாரத்தை மேலும் மந்தமாக விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக