செவ்வாய், ஏப்ரல் 17, 2012

ஆப்கானில் கடும் சண்டை ராணுவம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

புதுடெல்லி,ஏப்.- 16 - ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் தொடர்மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்க என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி வலியுறுத்தியுள்ளார். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி நடந்தது. அப்போது பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்திற்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். அல்கொய்தா இயக்கத்தினர்தான் அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடங்களைதற்கொலை படையினர் மூலம் விமானம் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால் அமெரிக்காவிற்கு பலத்த பொருள் நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அடியோடு அழிக்க முயன்றனர். இந்த நிலையில் ஆப்கானில் ஒளிந்திருந்த பின்லேடனுக்கு அந்நாட்டில் அரசாட்சி செய்து வரும் தலிபான்கள் உதவி செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா ஆப்கான் மீது படையெடுத்து தலிபான் அரசை அகற்றி அங்கு ஜனநாயக அரசை உருவாக்கியது. பின்னர் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த பின்லேடனையும் சுட்டுக்கொன்றது அமெரிக்கா. தற்போது மீண்டும் தலையெடுத்து வந்த தலிபான்கள் அமெரிக்க உதவியோடு ஆட்சியை பிடித்த ஆப்கன் அரசை எதிர்த்து போரில் இறங்கியுள்ளது. இந்த போர் கடுமாயாகவும், தொடர்ந்தும் நடந்து வருகிறது. இந்த கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ராணுவ தளபதிகளுடனான 3 நாள் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி கலந்து கொண்டார். அப்போது ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். தலிபான் தாக்குதல் நடைபெற்றாலும் கூட அந்நாட்டிற்கு இந்தியாவின் உதவி தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக