செவ்வாய், ஏப்ரல் 03, 2012

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்நாட்டைச்சேர்ந்த கலிபுல்லா பதவியேற்றார்

புதுடெல்லி, ஏப்.- 3 - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கலிபுல்லா ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து இப்போது இந்த பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக கடந்த 2000 மாவது ஆண்டு மார்ச் மாதம் 2 ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பிறகுதான் இவர் ஜம்மு காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1951 ம் ஆண்டு ஜுலை 23 ம் தேதி பிறந்த கலிபுல்லா, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவர் 1975 ம் ஆண்டு ஆகஸ்டு 20 ம் தேதி தன்னை ஒரு வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். இவர் தொழிலாளர் சட்ட வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்காக வாதாடி இருக்கிறார். இவர் தமிழ்நாடு மின்சார வாரிய நிலைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக