புதன், ஏப்ரல் 04, 2012

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவேண்டும்

புதுடெல்லி,ஏப்.- 5 - இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஹபீஸ் சய்யீது பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசாக அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியும் வரவேற்றுள்ளது. தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கவலைக்கு அமெரிக்கா மதிப்பு அளித்துள்ளது என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்தான் என்று இந்தியா கூறி வருகிறது. இந்தநிலையில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சய்யீதை பிடித்து தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் விருதாக அளிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக