வெள்ளி, ஏப்ரல் 13, 2012

சிரியாவில் உள்நாட்டுப் போர் நிறுத்தம் - இந்தியா வரவேற்பு

அரபு நாடுகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட 'அரபு வசந்தம்' எனப்படும் முல்லைப் புரட்சியின் அங்கமாக சிரியாவிலும் மக்கள் கிளர்ச்சி வெடித்து இருந்தது. சிரியாவில் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 10,000க்கும் அதிகமான மக்களை இராணுவம் கொன்று குவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா சார்பில் அதன் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் தலைமையில் சமாதான குழு அங்கு சென்றுள்ளது. கோஃபி அன்னான் தலைமையிலான குழு சிரிய அரசுடன் நடாத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து அங்கு தாக்குதலை நிறுத்த அரசு இணங்கியது. இதனால் சிரியாவில் துப்பாக்கிச் சப்தம் ஓயத் தொடங்கியுள்ளது. கொஃபி அன்னான் தலைமையிலான குழு பேச்சுவார்த்தைகளின் மூலம் உள்நாட்டுப்போரை நிறுத்தியுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்களை கோஃபி அன்னான் குழு செய்து அமைதியை நிலைநிறுத்த ஆவன செய்யும் என்று நம்புவதாக இந்திய அரசுத் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக