வெள்ளி, ஏப்ரல் 20, 2012

பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அஸ்ஸாம் பயணம்

கவுகாத்தி, ஏப்.- 21 - ஒரு நாள் பயணமாக நேற்று பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி சென்றார். கவுகாத்தியின் புறநகர் பகுதியில் போஜ்ஹார் என்ற இடத்தில் உள்ள லோக்பிரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 10.50 மணிக்குவந்துசேர்ந்த மன்மோகநஅ சிங்கை அம்மாநில கவர்னர் ஜே.பி. பட்நாயக், முதல்வர் தருண் கோகோய் ஆகியோர் வரவேற்றனர். பிறகு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கவுகாத்தியின் மையப்பகுதியில் உள்ள நேரு ஸ்டேடியத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் சென்றார். அவரது பாதுகாப்பிற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான வேறு இரண்டு ஹெலிகாப்டர்களும் உடன் சென்றன. பின்னர் பரூவா புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் செய்த மன்மோகன்சிங், அஸ்ஸாம் சட்டமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களின் துவக்க விழாவிலும் பங்கேற்றார். கவர்னர் மாளிகையில் சிறிதுநேர ஓய்விற்குப் பிறகு அவர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அஸ்ஸாமில் உள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதித்தார். பிறகு மீண்டும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் விமான நிலையத்திற்கு சென்றார். பிரதமரின் அஸ்ஸாம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உல்பா தீவிரவாதிகள் நேற்று 12 மணிநேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதையும் மீறி பிரதமர் தனது ஒருநாள் அஸ்ஸாம் பயணத்தை மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக