வெள்ளி, ஏப்ரல் 20, 2012

பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 127 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத் அருகே சக்லாலா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, இந்தத் துயர நிகழ்வு நடந்துள்ளது. கராச்சியில் இருந்து விமானப் பணிக்குழு உள்பட 127 பேருடன் இஸ்லாமபாத் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம், மாலை 6.50 மணியளவில் தொடர்பை இழந்துள்ளது. இதையடுத்து, அந்த விமானம், சக்லாலா பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு உடனடியாக மீட்புப் படையினர் விரைந்தனர். ஆனால், அந்த விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்துவிட்டனர். இதனை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமத் முக்தார்,விபத்துக்குள்ளான விமானம் நொறுங்கி விழுவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாகவும்,விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக