ஞாயிறு, ஏப்ரல் 22, 2012
இந்திய எம்.பி.க்கள் குழுவின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு!
கொழும்பு: இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் நேற்று குருனெகல பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மலையகமான ஹட்டனுக்கு முதலில் இந்திய எம்.பிக்கள் குழு சென்றது. இதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நிகழ்ச்சிகளிலும் இந்தியக் குழு பங்கேற்றது.
மட்டக்களப்பிற்குச் சென்றுவிட்டு கொழும்பு திரும்பும் வழியில் மோசமான வானிலை காரணமாக குருநாகல் பகுதியில் தரையிறக்கட்டது. இதனால் ராஜபக்சேயுடனாந சந்திப்பை ஒரு நாள் தள்ளிப் போட்டனர். நேற்று அவர்கள் மாலை சாலை மார்க்கமாகவே கொழும்பு திரும்பினர்.
இதனால்தான் இன்று காலை அக்குழு ராஜபக்சேவை கொழும்பில் சந்தித்துப் பேசினர் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக