வெள்ளி, ஏப்ரல் 06, 2012

காதலுக்கு எதிர்ப்பு - பெற்றோர் கொலை - பெண் கைது!

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோர் கொலையுண்ட வழக்கில் 22 வயது இளம் பெண் ஒருவரை மே.வங்க மாநில காவல்துறை கடந்த புதன் இரவு கைது செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் (ச்)சின்சுரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த இளம் பெண் மௌசுமி சர்க்காரை பதினான்கு நாள்கள் சிறைக்காவலில் வைத்து மேலும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன் பெற்றோருக்கு ஒரே மகளான மெளசுமி, மொய்துல் ஆலம் எனப்படும் ரிப்பன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் மெளசுமியின் பெற்றோர் இக்காதலை ஏற்காமல் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த மெளசுமி, பெற்றோருக்கு பாடம் கற்பிக்கும் படி காதலனிடம் கோரியுள்ளார். அதன் படி அந்தக் காதலனும் 30,000 ரூபாய்க்கு கூலிப்படை வைத்து மெளசுமியின் பெற்றோரை கொலை செய்துள்ளார். பெற்றோரை, கூலிப்படை வீட்டில் வெட்டிக்கொலை செய்துகொண்டிருந்த போது அதே வீட்டில் வேறு தளத்தில் இருந்த மெளசுமி பெற்றோரைக் காக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது காவல்துறையின் குற்றச்சாட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக