வெள்ளி, ஏப்ரல் 06, 2012

ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்ததால் இந்தியா மீது வருத்தமோ, பகையோ இல்லை - பெரீஸ் பேச்ச

கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததால், இலங்கை - இந்தியா உறவில் பாதிப்பு ஏற்படாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்ன நடந்தது என்பதையே நினைத்து, அதே இடத்தில் நிற்கக் கூடாது. அடுத்த நிலையை நோக்கி நமது கவனம் இருக்க வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை இந்தியா சில நிர்பந்தங்கள் காரணமாகவே ஆதரிக்க நேர்ந்தது என்று ஏற்கனவே தெரிவித்தேன். எனவே, இந்தியா மீது வருத்தமோ, பகையோ இலங்கைக்கு கிடையாது.இரு நாடுகள் இடையே உறவு ஒரே பரிமாணத்தை கொண்டதல்ல. அது பல வகைகளில் இணைந்தது. எனவே, உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மாதத்தில் இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான எம்.பி.க்கள் குழு இலங்கை வருகிறது. இதுவே இரு நாடுகள் இடையே நிலவும் நல்லுறவுக்கான அறிகுறி என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக