புதன், ஜூலை 04, 2012

தாய்லாந்தில் சுற்றுலா பஸ் விபத்து: 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் சாவு


சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ்ஸின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பஸ் டயர் வெடித்ததில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக போலீஸôர் தெரிவித்தனர். இங்குள்ள சூரத் தானி மாகாணத்தின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். இங்குள்ள கோ பாங்கான் எனும் தீவிற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இறந்த மற்றவர்களில் 8 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாவர். செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டயர் வெடித்ததே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்ளூர் போலீஸôர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக