வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

சாலையில் உல்லாசத்துக்கு அழைப்பது போல் பெண்ணை நிறுத்தி லாரிகளை மடக்கி வழிபறி செய்த மாணவர்கள் கும்பல்:


குடியாத்தத்தை சேர்ந்தவர் அப்சல் (30), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு கொரியர் பார்சல் ஏற்றி கொண்டு சென்னையில் இருந்து ஆம்பூருக்கு லாரியை ஓட்டி வந்தார். ஆற்காடு அடுத்த நந்தியாலம் அருகே வந்த போது இளம்பெண் ஒருவர் சாலையோரம் நின்று லாரியை மறித்தார். இதனைக்கண்ட அப்சல் லாரியை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்றார். அப்போது மறைந்திருந்த 4 பேர் கும்பல் அப்சலை தாக்கி அவரிடமிருந்து ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டனர். இதுபற்றி அப்சல் ஆற்காடு போலீசில் புகார் செய்தார். இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக வழிப்பறியில் ஈடுபட்டதாக மலர் (30), பாஸ்கரன் (22), ஆகியோரை பிடித்து விசாரித்தனர். மலர், பாஸ்கரனுடன் சேர்ந்து கும்பல் ஒன்று வழிபறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதுபோன்று ஏற்கனவே அந்த பகுதியில் டிரைவர் ஒருவரை தாக்கி வழிப்பறி செய்துள்ளனர். மலர் கொடுத்த தகவலின் பேரில் வேலூரை சேர்ந்த ஆசாத் (17), மகேஷ்குமார் (21), சிப்காட்டை சேர்ந்த விக்னேஷ் (18), முகமது பாஷா (19), மற்றொரு விக்னேஷ் (17), மணியம்பட்டை சேர்ந்த மகேஷ்குமார் (21), ஆகியோர் வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலரை சாலையில் நிற்க வைத்து உல்லாசமாக இருக்க ஆசை காட்டி பின்னர் டிரைவர்களை ஒதுக்குபுறமாக அழைத்து சென்று கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மலர், பாஸ்கர் ஆகியோரை கைது செய்த போலீசார் மாணவர்கள் 7 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக