புதன், டிசம்பர் 26, 2012

டிசம்பர் 26


டிசம்பர் 26, ஆழிப் பேரலை, சுனாமி என்ற வார்த்தைகளை கூட அறியாத மக்களுக்கு ராட்ச உருவமாய் அந்த வார்த்தைகள் காட்சி அளித்த நாள். கடல் பொங்கி எழுந்து சீற்றமுடன் பலரை விழுங்கிய நாள் , பிஞ்சு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் கடல் அலைகள் விட்டுவைக்கவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவனை பறிகொடுத்த மனைவி, குழந்தைகளை பலி கொடுத்த பெற்றோர் என மனதை உருக்கும் பிரிவுகள் நொடியில் நடந்து முடிந்தன. சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு இந்த நாளில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறோம் :-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக