திங்கள், டிசம்பர் 17, 2012

ரயில்வேகேட்டை கடக்கமுயன்ற சுமோமீது விரைவுரயில் மோதி இருவர்பலி


கும்பகோணம் டிசம்பர் - 17 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சன்னாபுரம் செல்லும் சாலையில் ஆண்டளாம்பேட்டை கிராமத்தில் ஆளில்லா ரயில்வே கேட் உள்ளது. இன்று மதியம் சுமார் 2 மணியளவில் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ஹாரன் அடிக்காமல் ஆண்டளாம்பேட்டை ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்து செல்ல முற்படும்போது திருப்பனந்தாள் திருவாய்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த டீக்கடை வைத்திருப்பவர் விஜயகுமார் (33). அவருடைய நண்பர் ஓட்டுநர் முருகராஜ் (30). இருவரும் தங்களது உறவினர் வீடு இருக்கும் மாசனக்குடிக்கு திருவாய்ப்பாடியிலிருந்து டாடாசுமோவில் சென்றுள்ளனர். திருவிடைமருதூர் சன்னாபுரம் சாலையில் உள்ள ஆண்டளாம்பேட்டை ஆளில்லா ரயில்வே கேட்டை கோவை விரைவு ரயில் வரும்பொழுது ஹாரன் ஒளி கேட்காததால் ரயில்வே கேட்டை ரயில்வருவது தெரியாமல் சுமோ கடந்தபோது கோவை விரைவு ரயில் டாடாசுமோவில் மோதி சுமோவில் வந்த விஜயகுமார், முருகராஜ் 100அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். முருகராஜீக்கு ராசாத்தி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். விஜயகுமாருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆளில்லா ரயில்வே கேட்டில் சுமோ மீது ரயில் மோதிய சம்பவர் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக