புதன், ஏப்ரல் 03, 2013

பிரவீன் தொகாடியாவை கைது செய்யவேண்டும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை !


தொடர்ச்சியாக சிறுபான்மை விரோத உணர்ச்சிகளை தூண்டுவிடும் வகையில் அறிக்கைகள் வெளியிடும் வி.ஹெச்.பி தலைவர் பிரவீன் தொகாடியாவை கைது செய்யவேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் பி.அப்துல் நாஸர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: நாடு முழுவதும் பிரவீன் தொகாடியா இனவெறியை பரப்புரைச் செய்துவருகிறார்.தொகாடியா, பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும். நேற்று முன் தினம் அஹ்மதாபாத்தில் நடத்திய உரையில் ஹிந்து மாநிலத்தை உருவாக்குவோம் என்பது நாட்டை வகுப்புவாத மயமாக்குவதற்கான முயற்சியாகும். இது நாட்டின் மீதான வெளிப்படையான போரைத்தான் தொகாடியா நடத்துகிறார். ஏதேனும் சிறுபான்மை தலைவர்கள் தங்களின் உரிமைகளைக் குறித்து பேசும்பொழுது உடனடியாக அவர்களை சிறையில் அடைக்கும் அதிகாரிகள், தொகாடியா, உமாபாரதி போன்றவர்களின் விஷக்கருத்துக்களை காணாதது போல் நடிக்கின்றனர் என்று பி.அப்துல் நாஸர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக