புதன், ஏப்ரல் 03, 2013

வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்...


வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்... 1) முதலில் வெளிநாடு immigration கவுன்ட்டர் சென்றதும் அவர்கள் பாஸ்போர்ட்- ல் exit சீல் பதிந்துள்ளனரா என்பதை பார்க்கவும். 2) இந்திய விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கும் முன்னரே எழுந்து ஓடவேண்டாம். சில சமயம் நம் அவசரத்தால் Hand Luggage மறக்க நேரிடும். 3) நம் விமான நிலையத்தில் Immigration கவுன்ட்டர் களில் - நம் சில லகுட பாண்டிகள் நம்மை பார்த்ததும் எராளமான பார்வையும் - குதர்க்கமான கேள்விகளையும் கேட்பார்கள் பயப்ப வேண்டாம். மேலே சொன்னது போன்று இங்கேயும் Exit முத்திரை இருக்கிறதா என்று பார்க்கவும்.. என் சகோதருக்கு இது போன்று தான் முத்திரை குத்தாமல் அனுப்பிவிட்டனர், அவரோ குழந்தைகள் வெளியே காத்திருக்கின்றனர் என்று பப்பரக்கானு பார்க்காமல் போய்விட்டார்..... பிறகு என்ன திரும்ப சென்னை விமான நிலையம் வரும்போது நீ எப்படி வெளில போனேன்னு 3 மாதம் கழித்து கேட்கின்றனர்... அடப்பாவிகளா அத உங்க அப்ப்ரண்டிச்ட கேளுங்க ஆபீசர்ஸ்.. பிறகு என்ன தனி ரூமில் வைத்து enquery செய்து பழிய சீல் தேதியில் முத்திரை இட்டு குவைத் அனுப்பி வைத்தனர்... கவனமாக கையாள வேண்டும் சகோதர்களே... 4) எல்லாம் முடிந்ததும் பாஸ்போர்ட் டை - பத்திரபடுத்திவிட்டு உங்கள் Luggage எடுக்க செல்லவும். 5) விமான நிலையம் உள்ளேயும் வெளியேயும் சில சில காக்கிகள் என்ன பாய் பொட்டில என்னனு கேப்பாங்க உண்மையை சொல்லி வெளியேறுங்கள்... மீறி பணம் கேட்டால் அருகில் உள்ள Aiport Authority ஆபீசரிடம் புகார் தெரிவியுங்கள். தகவல் : யாசீன் ஷாஜஹான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக