திங்கள், ஏப்ரல் 08, 2013

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து த.மு.மு.க ஆர்ப்பாட்டம்!


திருச்சி: பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலையை கண்டித்தும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளை கண்டித்தும் த.மு.மு.க சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக கடந்த 06.04.2013 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திருச்சி சிங்காரதோப்பு காமராஜர் வளைவு அருகில், பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை கண்டித்தும்... இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளை கண்டித்தும்... ஐ.நா. பெருமன்றம் உடனடியாக தலையிடக் கோரியும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க கோரியும், மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர்(ம.ம.க) பைஸ் அஹமது,மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக செயலாளர்.பேராசிரியர்.ஹாஜாகனி, மாவட்ட துணைத்தலைவர் முஹம்மதுரபீக், மாவட்ட வழக்கறிஞர் அணிச்செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் சையது முர்துஸா ஆகியோர்களின் கண்டன உரையாற்றினர்,சிறப்பு அழைப்பாளராக ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாயளர் மீரான் மிஸ்பாகி மற்றும் தமுமுக நிர்வாகிகள் பலர் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக