சனி, நவம்பர் 09, 2013

பிரேசிலில் இருந்து மேலும் இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் கப்பலில் வருகிறது!


மெட்ரோ ரயில் திட்டம் சோதனையோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வருகிறது. 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் 4 பெட்டிகளுடன் கூடிய சோதனையோட்டம் கடந்த 6ம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது. இதை அடுத்து மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த ரயில் பெட்டிகள் டிசம்பர் மாதம் சென்னை துறைமுகத்தை வந்தடையும் என்றும் தெரிய வருகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை ஒரு ரயில் தடமும் என்றும், சென்னை சென்ட்ரலில் இருந்து வண்ணாரப் பேட்டை வரை ஒரு ரயில் தடமும் என்றும் இரண்டு வழித் தடங்களாக செயல்பட உள்ளது என்றும் தெரிகிறது. மேலும் இந்த மெட்ரோ ரயிலுக்கு டிக்கெட் எடுத்து விட்டால் அவர்கள் மின்சார ரயில், மற்றும் மாநகரப் பேருந்துகள் என்று அனைத்திலும் பயணிக்கலாம என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக