வெள்ளி, பிப்ரவரி 10, 2012

சென்னையில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை குத்திக்கொலை


சென்னையில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை குத்திக்கொலை - தன்னைப்பற்றி புகார் அளித்ததால் மாணவன் வெறிச்செயல்
 1/1 

சென்னை, பிப்.10 - சரியாக படிக்காததால் மாணவனை கண்டித்து ஒழுங்குபடுத்தி நினைத்த ஆசிரியை மாணவனால் பள்ளி வளாகத்தில் குத்தி கொல்லப்பட்டார். இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை பாரிமுனையில் உள்ள அர்மீனியன் தெருவில் இருக்கும் புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் உமாமகேஸ்வரி(43) என்பவரை அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் மாணவன் முகமது இர்பான். இவன் பள்ளியில் ஒழுங்காக படிக்காமல் ஒழுங்கீனமாக இருந்ததால் ஆசிரியை அவனை கண்டித்து பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் இர்பான் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியை உமாமகேஸ்வரி வழக்கம்போல் 10-ம் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென்று ஆவேசத்துடன் உள்ளே நுழைந்த இர்பான் கத்தியால் ஆசிரியை உமாமகேஸ்வரியை குத்த பாய்ந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆசிரியை அவனிடம் இருந்து தப்பிக்க வெளியே ஓடியுள்லார். ஆனாலும் அவரை விடாமல் துரத்தி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை பலியானார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மாணவனை மடக்கி பிடித்தனர். 
இந்தி ஆசிரியை உமாமகேஸ்வரியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து மாணவன் முகமது இர்பான் பரபரப்பு வாக்குமூலம்அளித்துள்ளான். தன்னைப் பற்றி பெற்றோரிடம் புகார் கூறியதாலும், மதிப்பெண் போடுவதில் ஏற்பட்ட பிரச்சினையாலும் அவரை குத்திக் கொன்றதாக இர்பான் தெரிவித்தான்.
ஆசிரியை கொலை செய்யப்பட்டதை அறிந்து அந்தப் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பள்ளி விடுமுறை விடப்பட்டது. வகுப்பறையிலேயே மாணவர் ஒருவரால் ஆசிரியை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக