வியாழன், ஏப்ரல் 26, 2012

ரிசாட்-1 செயற்கைக் கோள் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை, ஏப். 26 - பனி, மழை போன்ற பருவ காலத்திலும் துல்லியமாக படங்களை எடுத்து தரும் ரிசாட் - 1 செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி - 19 ராக்கெட் மூலம் இன்று காலை 5.47 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான 71 மணி நேர கவுன்ட் டவுன் திங்கட்கிழமை காலை 6.47 மணிக்கு தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக இஸ்ரே அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது பனி அதிகமுள்ள காலங்களில் தெளிவான படங்களை பெற வேண்டுமானால் கனடா நாட்டின் செயற்கைக் கோளையே நம் நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. ரிசாட் - 1 செயற்கைக் கோளை ஏவுவதன் மூலம் அத்தகைய படங்களை மற்ற நாட்டின் துணையின்றி நாமே பெறலாம். இந்த ரிசாட் - 1 செயற்கைக் கோள் 1,858 கிலோ எடையுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 19 வகை ராக்கெட் என்பது எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப்படும் எக்ஸ்.எல். வகையாகும். இது போன்ற ராக்கெட் இஸ்ரோவால் மூன்றாவது முறையாக இப்போது விண்ணில் ஏவப்படுகிறது. மற்ற நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சந்திராயன் - 1 மற்றும் ஜி சாட் 12 ஆகிய செயற்கைக் கோள்களை அதன் சுற்று வட்ட பாதைகளில் செலுத்துவதற்கு இந்த பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ராக்கெட் தான் பயன்படுத்தப்பட்டது. இப்போது ரிசாட் - 1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோளை வடிவமைக்க ரூ. 178 கோடியும், ராக்கெட்டை தயாரிக்க ரூ. 120 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக