வியாழன், ஏப்ரல் 05, 2012

போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


திருவள்ளூர்: போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியை அடுத்த சொக்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). தொழிலாளி. குடிப்பழக்கம் கொண்டவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் ரமேஷின் மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு போயிருந்தார். மனைவி வீட்டில் இல்லாததால் ரமேஷ் அதிகமாக மது குடித்துள்ளார். இரவு போதையில் வீட்டிற்கு வந்தவர் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ரமேஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று இறந்தார். புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக