ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

சென்னை கடலில் இந்தியா​- அமெரிக்க கப்பல்கள் கூட்டாக போர் பயிற்சி

சென்னை, ஏப்.- 8 - சென்னை கடலில் இந்தியா​- அமெரிக்க கப்பல்கள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டன இந்தியா ​ அமெரிக்க கப்பல் படைகள் கூட்டாக போர் பயிற்சி செய்ய முடிவு செய்துள்ளன. இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்காக நல் எண்ண அடிப்படையில் 1992​ம் ஆண்டு முதல் இந்தியா​அமெரிக்க படையினர் கூட்டுப் பயிற்சி நடத்தி வருகிறார்கள். இதுவரை 15 முறை இது போன்ற பயிற்சிகள் நடந்து உள்ளன. 16​வது பயிற்சி சென்னை மற்றும் அந்தமான் நிக்கோ பார் தீவுகளின் அருகே உள்ள இந்திய கடல் பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவப்பயிற்சிக்கு 'மலபார்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. போர் பயிற்சிக்காக அமெரிக்க கடற்படை வீரர்களுடன் யு.எஸ்.எஸ். கார்ல் வில்சன் என்ற பிரமாண்ட கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது அமெரிக்காவின் 7​வது பிரீட் என்ற கடற்படை பிரிவைச் சேர்ந்தது. இந்த கப்பலுடன் யு.எஸ்.எஸ். பங்கர்சில், யு.எஸ்.எஸ். ஹல்சே என்ற கப்பல்களும் வந்துள்ளன. அணு சக்தியில் இயங்கும் கார்ல் வில்சன் கப்பல் உலகை கலக்கிய தீவிரவாதி பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியது. ஏராளமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் இந்த கப்பலில்தான் பின்லேடனின் இறுதிச் சடங்கு நடந்தது. அமெரிக்க கடற்படை வீரர்களுடன் இணைந்து போர்ப் பயிற்சி செய்வதற்காக இந்திய கடற்படை ராணுவ வீரர்களுடன் ஏவுகணைகள் தாங்கிய இந்திய கடற்படை கப்பல்களான ஐ.என்.எஸ். சத்nullர், ஐ.என்.எஸ். ரான்விஜய், ரன்வீர், குலிஷ், பீரங்கி தாங்கிய கப்பல் ஐ.என்.எஸ். சக்தி, விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் நீnullர் மூழ்கி கப்பல்களும் வந்துள்ளன. நேற்று முதல் வருகிற 9​ந்தேதி வரை இந்திய​ அமெரிக்க கடற்படை வீரர் களுக்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் போர் பயிற்சி நுணுக்கங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எந்தவிதமான பயிற்சியை நடத்துவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து 16​ந்தேதி வரை கூட்டுப் போர் பயிற்சி நடக்கிறது. பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு எதிராக சீனா நடந்து வருகிறது. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் இலங்கை சீனாவுடன் உள்ள நெருக்கத்தை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள வங்க கடலில் சென்னை அருகிலும், இலங்கைக்கு கிழக்கே உள்ள அந்தமான் ​ நிக்கோபார் பகுதியில் இருக்கும் இந்திய கடல் பகுதியிலும் இந்தியா ​ அமெரிக்க கடற்படையினர் கூட்டுப் பயிற்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக