புதன், மே 23, 2012

இந்தியாவின் 200 கோடி டாலர் தெற்காசிய உதவித் திட்டம்


இந்தியா, தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கு உதவ, 200 கோடி டாலர்கள் அளவுக்கு, நிதி உதவி அமைப்பு ஒன்றை , தனது மத்திய வங்கியான , ரிசர்வ் வங்கியின் மூலம் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம், அண்டை நாடுகள் , இந்தியாவின் ரிசர்வ் வங்கியை அணுகி நிதி உதவி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய கடன் வசதி அமைப்பு ,அண்டை நாடுகளிடையே, இந்தியா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலானது என்ற கருத்து இருக்கிறது. தொடர்புடைய விடயங்கள் உலகம் இந்த்த் திட்ட்த்தின் நோக்கம் என்ன, இந்தியாவிடமிருந்து அண்டை நாடுகளுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை இது பூர்த்தி செய்யுமா என்பது குறித்து கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலர் நீலகண்டன் ரவி இது அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என்றார். நீலகண்டன் ரவி பேட்டி மாற்று மீடியா வடிவில் இயக்க அண்டை நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு இருக்கும் செல்வாக்கை உயர்த்துவதற்கும் இந்த மாதிரியான கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று கருதப்பட்டாலும், பங்களா தேஷ் போன்ற நாடுகள் , இந்தியாவிடமிருந்து நிதி உதவியை விட, நதி நீர்ப் பங்கீடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வையே அதிகம் விரும்புகின்றன , எனவே இத்திட்டம் எந்த அளவுக்கு இந்தியாவின் பிராந்திய வெளியுறவுக் கொள்கைகளுக்கு அனுகூலத்தைத் தரும் என்று கேட்ட்தற்கு பதிலளித்த அவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கும், செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ளவும், இந்தியாவுக்கு இருக்கும் பல்வேறு வழிகளில் இது போன்ற நிதி உதவித் திட்டமும் ஒன்றுதான். ஒரு கதவு மூடப்பட்டிருந்தால், மற்றொரு கதவைத் திறந்து முன்னேறுவது போலத்தான் இவையும் என்றார் ரவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக