வெள்ளி, மே 11, 2012

ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் தொடர்கிறது 22 விமானங்கள் ரத்து


புதுடெல்லி, மே - 11- ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் ஸ்டிரைக் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவின் விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. விமானிகளின் இந்த போராட்டத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஏர் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விமானிகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி விமானிகள் நேற்று 3-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினர்.இதனால் 23 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மும்பையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி வர வேண்டிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்த தகவல்களை ஏர் இந்தியா அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 200 விமானிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக