டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து 55.35 ஆனது.. பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம்!
மும்பை: டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் வேகமாக சரிவடைந்து வருகிறது. இன்று ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 55.35 என்ற நிலையை அடைந்துள்ளது.
இன்று ஒரு தினத்தில் மட்டும் அதன் மதிப்பு 33 பைசா சரிந்துவிட்டது.
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியால் யூரோவின் மதிப்பு சரிவதாலும், அதே நேரத்தில் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு கூடி வருவதாலும், இந்தியாவில் இறக்குமதியாளர்கள் டாலர்களை வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் (டாலரின் மதிப்பு அதிகரிப்பதால்), இறக்குமதியாளர்கள் பீதியில் உள்ளனர். அடுத்த சில வாரங்களில் தங்களது பொருட்களை இறக்குமதி செய்ய அதிக பணம் தேவைப்படும் என்பதால், அதை இப்போதே பதுக்க ஆரம்பித்துவிட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வு நிச்சயம்!:
டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது.
இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு ரூ. 5 வரை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ. 3ம் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசிடம் பெட்ரோலியத்துறை அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக