சனி, ஜூன் 02, 2012

உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைப்பு- புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது


டெல்லி: நாட்டின் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ2 குறைக்கப்பட்டுள்ளது. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை சில நாட்களுக்கு முன்பு 1 லிட்டருக்கு ரூ7.50 வரை அதிரடியாக ஒரே நாளில் உயர்த்தப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையில் ரூ2 குறைக்கப்படுவதாக எணெய் நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இப்புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக