சனி, ஜூன் 09, 2012

டெல்லியில் சில நாட்கள் மட்டுமே அவைக்கு வரும் எனக்கு அரசு பங்களா தேவையில்லை. சச்சின்


எம்.பி என்ற முறையில் எனக்கு அரசு பங்களா வேண்டாம் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்ற சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும் ஒரு சில நாட்கள் அவைக்கு வர திட்டமிட்டுள்ளேன். இதற்காக ஒரு சில நாட்கள் மட்டும் டெல்லியில் தங்குவேன். அந்த ஒரு சில நாட்களுக்காக எனக்கு தனியாக பங்களா ஒதுக்க வேண்டியது தேவையில்லை. எம்.பி என்ற முறையில் அரசு எனக்கு பங்களா ஒதுக்கினால் அதை ஏற்க மாட்டேன். ஒரு சில நாட்கள் தங்குவதற்காக வருடம் முழுவதும் பராமரிப்பு செலவு வீணாகிவிடும். பங்களாவை நான் ஏற்றுக் கொண்டால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகும். எனக்கு பங்களா ஒதுக்குவதைவிட வீடு தேவைப்படும் வேறொருவருக்கு அதை தரலாம். இவ்வாறு டெண்டுல்கர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக